பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | வீட்ல விசேஷங்க |
Malare Thendral Song Lyrics in Tamil
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…
—BGM—
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…
ஆண் : நிலம் இடம் மாறினாலும்…
நிழல் நிறம் மாறினாலும்…
நிலை பெறும் காதல் என்னும்…
நிஜம் நிறம் மாறிடாது…
இறைவனின் தீர்ப்பு இது… ஓஓ…
எவர் இதை மாற்றுவது…
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
—BGM—
ஆண் : பூபாளம் கேட்கும் அதிகாலையும்… ம்ம்…
பூஞ்சோலை பூக்கும் இள மாலையும்… ம்ம்…
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்… ம்ம்…
நீ பேசும் பேச்சு மணி வாசகம்…
ஆண் : உள்ளம் எனும் வீடெங்கும் உன் அழகை நான்தானே…
சித்திரத்தைப் போல் என்றும் ஒட்டி வைத்துப் பார்த்தேனே…
எனைத் தழுவும் இளம் தளிரே…
உனக்கென நான் வாழ்கிறேன்…
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…
—BGM—
ஆண் : காட்டாறு போலே சில வேளையில்…
காவேரி ஓடும் பல பாதையில்…
ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்…
நாள் ஆன போதும் அது நேர்ந்திடும்…
ஆண் : திக்குத் திசை தோன்றாமல்…
வண்ணக் கிளி போனாலும்…
தான் இருந்த கூட்டைத்தான் தேடி வரும் எந்நாளும்…
இரு மனமும் ஒரு மனதாய் இணைந்திடும் நாள் வாய்த்ததே…
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…
ஆண் : நிலம் இடம் மாறினாலும்…
நிழல் நிறம் மாறினாலும்…
நிலை பெறும் காதல் என்னும்…
நிஜம் நிறம் மாறிடாது…
இறைவனின் தீர்ப்பு இது… ஓஓ…
எவர் இதை மாற்றுவது…
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…
Notes : Malare Thendral Song Lyrics in Tamil. This Song from Veetla Visheshanga (1994). Song Lyrics penned by Vaali. மலரே தென்றல் பாடல் வரிகள்.