பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மனோ & மின்மினி | இளையராஜா | எங்க தம்பி |
Malaiyoram Maankuruvi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…
மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…
பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…
மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…
—BGM—
ஆண் : பூங்காத்து வீசுது அனல பூசுது…
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா…
பெண் : தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்…
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா…
ஆண் : சேலை கட்டும் நந்தவனம் நீயா…
செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா…
பெண் : கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா…
சின்ன இடை தேய்வதென்ன நோயா…
ஆண் : கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா…
நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா… ஹோய்…
பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…
மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…
மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…
ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…
—BGM—
பெண் : கல்யாண மாப்பிள்ளே…
எனை நீ பாக்கல…
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா…
ஆண் : ஊரெங்கும் தோரணம்…
நடக்கும் ஊர்வலம்…
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா…
பெண் : அந்தியிலே சந்தனத்த பூச…
ஆசைகளை கண்களிலே பேச…
ஆண் : சேலையிலே நீ விசிறி வீச…
காலையிலே பார்த்த கண்ணு கூச…
பெண் : என்ன சுகமோ எப்ப வருமோ…
என்னென்னவோ பண்ணுதையா ஆசை… ஹோ…
ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
பெண் : மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…
ஆண் : மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…
பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…
ஆண் : மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…
Notes : Malaiyoram Maankuruvi Song Lyrics in Tamil. This Song from Enga Thambi (1993). Song Lyrics penned by Pulamaipithan. மலையோரம் மாங்குருவி பாடல் வரிகள்.