பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | நிழல்கள் |
Madai Thiranthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…
—BGM—
ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது…
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது…
ஆண் : புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்…
அமைத்தேன் நான்…
ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…
—BGM—
ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்…
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்…
ஆண் : வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கேதான்…
ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…
—BGM—
Notes : Madai Thiranthu Song Lyrics in Tamil. This Song from Nizhalgal (1980). Song Lyrics penned by Vaali. மடை திறந்து பாடல் வரிகள்.