மாலையில் யாரோ மனதோடு பேச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதாஇளையராஜாசத்ரியன்

Maalaiyil Yaaro Manathoda Pesa Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…

பெண் : தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…

பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…

BGM

பெண் : வருவான் காதல் தேவன் என்று…
காற்றும் கூற…
வரட்டும் வாசல் தேடி இன்று…
காவல் மீற…

பெண் : வளையல் ஓசை ராகமாக…
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை…
ஒரு நாள் வண்ண மாலை சூட…
வளர்த்தேன் ஆசைக்காதலை…

பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…

BGM

பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி…
விண்ணைப் பார்க்க…
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து…
கண்ணைப் பார்க்க…

பெண் : அடடா நானும் மீனைப் போல…
கடலில் வாழக்கூடுமோ…
அலைகள் வெள்ளி ஆடை போல…
உடலின் மீது ஆடுமோ…

பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…

பெண் : தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…

பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…


Notes : Maalaiyil Yaaro Manathoda Pesa Song Lyrics in Tamil. This Song from Chatriyan (1990). Song Lyrics penned by Vaali. மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top