பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | சுவர்ணலதா | இளையராஜா | சத்ரியன் |
Maalaiyil Yaaro Manathoda Pesa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
பெண் : தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…
பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
—BGM—
பெண் : வருவான் காதல் தேவன் என்று…
காற்றும் கூற…
வரட்டும் வாசல் தேடி இன்று…
காவல் மீற…
பெண் : வளையல் ஓசை ராகமாக…
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை…
ஒரு நாள் வண்ண மாலை சூட…
வளர்த்தேன் ஆசைக்காதலை…
பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
—BGM—
பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி…
விண்ணைப் பார்க்க…
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து…
கண்ணைப் பார்க்க…
பெண் : அடடா நானும் மீனைப் போல…
கடலில் வாழக்கூடுமோ…
அலைகள் வெள்ளி ஆடை போல…
உடலின் மீது ஆடுமோ…
பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
பெண் : தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…
பெண் : நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
Notes : Maalaiyil Yaaro Manathoda Pesa Song Lyrics in Tamil. This Song from Chatriyan (1990). Song Lyrics penned by Vaali. மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் வரிகள்.