பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ரஞ்சித் | எம்.எஸ். விஸ்வநாதன் & யுவன் ஷங்கர் ராஜா | தில்லு முல்லு (2013) |
Kai Pesi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்…
அதிகம் கொதிக்குதே…
கொதிக்க கொதிக்க குஷியில் எனது…
இதயம் குதிக்குதே…
ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்…
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்…
என் ஜாதகம் காதல் யோகம்…
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…
—BGM—
ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று…
தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன்…
உடைத்ததை நீயே உள் புகுந்தாயே…
தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்…
ஆண் : உலகெல்லாம் உறங்கையில்…
உயிரை நீ தயிரை போல் கடைகிறாய்…
உணர்ச்சியில் கிறங்கையில்…
மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய்… ஒஓஒஓ…
—BGM—
ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம்…
படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ்புக்கில்தான்…
அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி…
விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில்தான்…
ஆண் : விடை இல்லா கேள்வி நீ…
நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்…
தடைகளை தகர்த்து நீ…
அடிமையை அரசி போல் ஆள்கிறாய்… ஒஓஒஓ…
—BGM—
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்…
அதிகம் கொதிக்குதே…
கொதிக்க கொதிக்க குஷியில் எனது…
இதயம் குதிக்குதே…
ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்…
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்…
என் ஜாதகம் காதல் யோகம்…
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…
—BGM—
Notes : Kai Pesi Song Lyrics in Tamil. This Song from Thillu Mullu (2013). Song Lyrics penned by Vaali. கைபேசி எண் பாடல் வரிகள்.