| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | கிருஷ்ணச்சந்திரன் & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | தூரத்து பச்சை |
Ithu Varaiyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…
ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா…
ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
—BGM—
ஆண் : ஆகாய மேகமே நீர்விட்டது…
பெண் : ஆனந்தம் பூமியில் வேர் விட்டது…
ஆண் : பூவோடு காயும் கொடி கொண்டது…
பெண் : கொடியோடு யாவும் மடி கண்டது…
ஆண் : மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது…
—BGM—
பெண் : என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ…
ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
—BGM—
பெண் : ஆரம்பமானது ஆலிங்கனம்…
ஆண் : அது இந்தக் காதலில் ஆலாபனம்…
பெண் : ஏகாந்த நேரம் ராஜாங்கமோ…
ஆண் : ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ…
பெண் : உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது…
—BGM—
ஆண் : உற்சாக கங்கை ஒன்று பாயாதோ…
ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…
ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா…
ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
Notes : Ithu Varaiyil Song Lyrics in Tamil. This Song from Dhoorathu Pachai (1987). Song Lyrics penned by Vaali. இது வரையில் பாடல் வரிகள்.
