பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | அன்னா கத்ரீனா, வளையில் சண்டி & கோபி சுந்தர் | கோபி சுந்தர் | பெங்களூர் நாட்கள் |
En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…
பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல்…
ஒட்டுக் கேட்பதேன்…
நெஞ்சுள் முணுமுணுப்பதேன்…
என் வாழ்வை வாழ்வதேன்…
பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட…
உனைக் கேட்டு வரவேண்டுமா…
நீ எந்தன் சுவாசமா…
பெண் : மீண்டும் மீண்டும் என் மேல்…
பூ வீசிப் போகிறாய்…
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ…
—BGM—
பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா்…
நான் ஏந்த முயல்கின்றேன்…
உன் சோகம் என் நெஞ்சில்…
ஏந்திப் போகிறேன் அது ஏனடா…
பெண் : நான் ஏன் நீயாகிறேன்…
ஆயினும் நான் நானே…
என்னில் உனைக் காணத்தானே…
நீயானேனே நானே…
—BGM—
ஆண் : அருகே நீ தூரமாய்…
தினமும் கொன்றாயடி…
யாா் யாரோ நாம் என்றாயடி…
—BGM—
ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன்…
கேளாமல் நீ சென்றாய்…
என் மேல் காதல் தோன்றாதா…
பேசாமல் நீ வதைக்கிறாய்…
ஆண் : என் காதல் நீ காண மாட்டாயா…
மாட்டாயா…
—BGM—
Notes : En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. என் விழியின் பாடல் வரிகள்.