பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | பி. ஜெயச்சந்திரன் & மின்மினி | ஏ.ஆர்.ரகுமான் | வண்டிச்சோலை சின்ராசு |
Chitthirai Nilavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…
ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…
—BGM—
பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று…
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்…
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள…
காதல் வந்தால் யாருக்கு தெரியும்…
ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ…
மின்னல் பெண்னே யாருக்கு தெரியும்…
மோகம் கொண்ட பெண் யாரென்று…
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்…
பெண் : நிலா எது விண்மீன் எது…
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்…
ஆண் : நாணம் எது ஊடல் எது…
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்…
ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…
—BGM—
பெண் : மரங்களில் எத்தனை பழமோ…
பழம் உண்ணும் பறவைகள் அறியும்…
பழங்களில் எத்தனை மரமோ…
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்…
ஆண் : எந்த உறை தன் உறை என்று…
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்…
எந்த இடை தன் இடையென்று…
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்…
பெண் : நிலாவிலே காற்றே இல்லை…
இது எத்தனை பேருக்கு தெரியும்…
காதல் வந்தால் கண்ணே இல்லை…
காதல் கொண்ட யாருக்கு தெரியும்…
ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…
ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…
Notes : Chitthirai Nilavu Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Pulamaipithan. சித்திரை நிலவு பாடல் வரிகள்.