Category Archives: என் உயிர் கண்ணம்மா

என் உயிர் கண்ணம்மா – En Uyir Kannamma (1988)

பூம்பாறையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஎன் உயிர் கண்ணம்மா

Poombaaraiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி…
இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி…
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி…
இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி…

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…

BGM

ஆண் : தன்னாலே பெண் ஒருத்தி தாயாக ஆன கதை…
உண்டாக்கி வைத்தவனே ஓர் நாளும் அறிந்ததில்லை…

ஆண் : கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்…
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்…

ஆண் : யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை…
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே…
என்னாகும் நாளை என்று ஏன் மறைத்தாய்…

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி…
இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி…

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…

BGM

ஆண் : அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே…
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதங்கே…

ஆண் : உல்லாச ராகத்திலே பாடுதொரு சோடிக் குயில்…
சொல்லாமல் மௌனத்திலே வாடுதொரு ஊமைக் குயில்…

ஆண் : வாய்ப் பூட்டு போட்டுகிட்டா வந்ததை ஏத்துகிட்டா…
பாய் போட்டு தனை இழந்த பூந்தோகை…
தன்னாலே வந்த வினைதான் சுமந்தாள்…

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி…
இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி…
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி…
இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி…

ஆண் : பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி…
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி…


Notes : Poombaaraiyil Song Lyrics in Tamil. This Song from En Uyir Kannamma (1988). Song Lyrics penned by Vaali. பூம்பாறையில் பாடல் வரிகள்.