பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | L.R. ஈஸ்வரி | வி. குமார் | வெள்ளி விழா |
Kaathoduthaan Naan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
—BGM—
பெண் : வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்…
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்…
பெண் : உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா…
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடு தான் நான் பேசுவேன்…
விழியோடு தான் விளையாடுவேன்…
உன் மடி மீது தான் கண் மூடுவேன்…
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
—BGM—
பெண் : பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…
பெண் : எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது…
பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…
Notes : Kaathoduthaan Naan Song Lyrics in Tamil. This Song from Velli Vizha (1972). Song Lyrics penned by Vaali. காதோடுதான் நான் பாடுவேன் பாடல் வரிகள்.