பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. சைலஜா | சங்கர் கணேஷ் | ஆடி வெள்ளி |
Aayi Mahamayi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
பெண் : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
பெண் : சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…
பெண் : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
—BGM—
பெண் : மங்கல குங்குமப் பொட்டுக்காரி…
மாலினி சூலினி வித்தக்காரி…
—BGM—
பெண் : மின்னிடும் வேப்பல சேலக்காரி…
மணக்குற எலுமிச்ச மாலக்காரி…
பெண் : வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா…
ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா…
—BGM—
குழு : ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி…
நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு…
பெண் : மாதவ சோதரி முத்துமாரிதான்…
தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான்…
குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…
குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
—BGM—
குழு : ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்…
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்…
பெண் : அன்னையை பாடுது நாலு வேதம்…
ஆணையை கேட்குது பஞ்சபூதம்…
ஆலய பூஜைதான் ஆறுகாலம்…
அன்னையை போற்றுது ஏழு லோகம்…
பெண் : எப்போது கேட்டாலும் பம்பை சத்தம்…
ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம்…
குழு : ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை…
வேண்டினா போதும் அவங்க வேதன தீரும்…
பெண் : சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம்
நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம்…
—BGM—
குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…
{ குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி… } (2)
—BGM—
Notes : Aayi Mahamayi Song Lyrics in Tamil. This Song from Aadi Velli (1990). Song Lyrics penned by Vaali. ஆயி மகமாயி பாடல் வரிகள்.