பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | சங்கர் கணேஷ் | திருமதி ஒரு வெகுமதி |
Aavadhum Pennale Manithan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
—BGM—
ஆண் : தெற்கு மதுரையில் கற்பு சுடர்பட்டு…
வெந்ததும் பெண்ணாலே…
அன்று விளையாட்டு சிறுபிள்ளை…
வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே…
ஆண் : நில் என்று சொன்னதும் சுள் என்ற சூரியன்…
நின்றது பெண்ணாலே…
சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு…
அன்று தோற்றதும் பெண்ணாலே
ஆண் : இந்தியா தங்க பதக்கம்…
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே…
இந்தியா தங்க பதக்கம்…
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே…
அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே…
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
—BGM—
ஆண் : மனம் கெட்டு தசரதன் செத்து செத்து…
உயிர்விட்டதும் பெண்ணாலே…
—BGM—
ஆண் : அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு…
மன்னன் கெட்டதும் பெண்ணாலே…
—BGM—
ஆண் : பாலைவனம் எங்கும் மூளை கெட்டு…
மஜ்னு போனதும் பெண்ணாலே…
அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்…
என்று ஆனதும் பெண்ணாலே…
ஆண் : இந்தக் கால கட்சிகளும்…
இரண்டாச்சு பெண்ணாலே…
இந்தக் கால கட்சிகளும்…
இரண்டாச்சு பெண்ணாலே…
ஆண் : கை நீட்ட மறுத்த பய…
கவிழ்ந்தான்டி முன்னாலே…
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
—BGM—
ஆண் : பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று…
கொடி நட்டதும் பெண்ணாலே…
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு…
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே…
ஆண் : கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை…
தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே…
பாண்டி மன்னன் அரண்மனை…
மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே…
ஆண் : நல்லதும் கெட்டதும் இங்கே…
நடப்பதெல்லாம் பெண்ணாலே…
நல்லதும் கெட்டதும் இங்கே…
நடப்பதெல்லாம் பெண்ணாலே…
முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே…
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
ஆண் : ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
Notes : Aavadhum Pennale Manithan Song Lyrics in Tamil. This Song from Thirumathi Oru Vegumathi (1987). Song Lyrics penned by Vairamuthu. ஆவதும் பெண்ணாலே பாடல் வரிகள்.