பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | சுனந்தா | இளையராஜா | வால்டர் வெற்றிவேல் |
Mannava Mannava Song Lyrics in Tamil
பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…
பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…
பெண் : ஒ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
—BGM—
பெண் : நாள்தோறும் காவல் நின்று…
நம்மை காக்கும் தந்தை உண்டு…
இந்த வாழ்வு என்பது…
அந்த தெய்வம் தந்தது…
பெண் : ராஜாதிராஜன் என்று…
பல தேசம் நீயும் வென்று…
வர வேண்டும் கண்மணி…
வெற்றிவேலின் பிள்ளை நீ…
பெண் : தென் மதுரை சீமை எல்லாம்…
அரசு ஆளும் உன்னை கண்டு…
திரு தோளில் மாலை சூடும்…
மகாராணி யாரோ இங்கு…
பெண் : ஒளி விடும் எதிர்காலம் ஒன்று…
உருவாகும் நாளை இங்கு…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…
பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…
—BGM—
பெண் : மீனாட்சி கையில் கொண்டு…
அருள் கூறும் பிள்ளை ஒன்று…
உருமாறி நின்றதோ…
எந்தன் மகனாய் வந்ததோ…
பெண் : காமாட்சி கோயில் கொண்டு…
சுடர் வீசும் தீபம் ஒன்று…
எந்தன் வீடு வந்ததோ…
பிள்ளை வடிவாய் நின்றதோ…
பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்…
உருகாதா தாயின் சித்தம்…
விழியோரம் நீரை கண்டால்…
கொதிக்காதா அன்னை ரத்தம்…
பெண் : உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது…
வளர்ப்பேனே தோளின் மீது…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…
பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…
பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…
பெண் : ஓ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…
Notes : Mannava Mannava Song Lyrics in Tamil. This Song from Walter Vetrivel (1993). Song Lyrics penned by Vaali. மன்னவா மன்னவா பாடல் வரிகள்.